பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தலைஞாயிறு பேரூராட்சியில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வெற்றிலைப் பாக்கு பழம் வைத்து அழைப்பு

தலைஞாயிறு பேரூராட்சி பகுதிக்குள்பட்ட மக்கள் கரோனா தடுப்புக்கான இரண்டாவது மெகா தடுப்பூசி முகாமுக்கு வீடு வீடாக சென்று  வெற்றிலைப் பாக்கு பழம்  வைத்து அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

தலைஞாயிறு பேரூராட்சியில் தடுப்பூசி போட்டுக் கொள்ள  வெற்றிலைப் பாக்கு பழம் வைத்து விடுக்கப்படும் அழைப்பு

Published On :

வேதாரண்யம்: நாகை மாவட்டம்,வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பேரூராட்சி பகுதிக்குள்பட்ட பொது மக்கள் கரோனா தடுப்புக்கான இரண்டாவது மெகா தடுப்பூசி முகாமுக்கு இன்று (செப்.19) வீடு வீடாக சென்று  வெற்றிலைப் பாக்கு பழம்  வைத்து அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

தலைஞாயிறு பேரூராட்சியில் எண்பது சதவிகித பொதுமக்கள் தடுப்பூசி முகாம்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இருபது சதவிகிதம் பேர்  தடுப்பூசி முகாம்களுக்கு வருகை தரவில்லை.

நூறு சதவிகிதம் இலக்கை எட்ட வாகனம் மூலம் நடமாடும் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப் பட்டு வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தப் பட்டது.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ள சிலர்  தயக்கம் காட்டிய நிலையில் அவர்களின் வீடுகளில் நடமாடும் தடுப்பூசி முகாம் வாகனத்தை நிறுத்தி வெற்றிலைப் பாக்கு வைத்து தடுப்பூசி போட்டுக் கொள்ள தலைஞாயிறு பேரூராட்சி தன்னார்வலர்கள் அழைப்பு விடுத்தனர். 

அழைப்பை மறுக்க முடியாத பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இது குறித்து செயல் அலுவலர் கு.குகன் தெரிவித்தது :
தலைஞாயிறு பேரூராட்சியில் 100% தடுப்பூசி இலக்கு எட்ட நடமாடும் தடுப்பூசி முகாம், சமூக வலை தளங்களில் பிரசாரம், ஆடல் பாடல் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது வெற்றிலை பாக்கு பழம் வைத்து அழைத்து வருகிறோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.