விலங்குகளை வைத்து போராட அனுமதி தர முடியாது: உயர் நீதிமன்றம்

விலங்குகளை வைத்து போராட அனுமதி தர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
Updated on
1 min read

சென்னை: விலங்குகளை வைத்து போராட அனுமதி தர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டத்தில் விலங்குகளை துன்புறுத்த அனுமதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எருமை மாட்டை காலை முதல் மாலை வரை நிற்க வைத்து போராட்டம் நடத்துவது சட்டத்தை மீறிய செயல் என்றும், எருமை மாட்டிடம் மனு அளிக்கும் போராட்டத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விழுப்புரத்தை சேர்ந்த புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி நிர்வாகி முத்து தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com