சுருளி அருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

சுருளி அருவியில் குளிக்க அனுமதி: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

தேனி மாவட்டம், சுருளி அருவியில் வெள்ளிக்கிழமை முதல் குளிக்க புலிகள் காப்பகத்தினர் அனுமதி வழங்கினர்.
Published on

கம்பம்: தேனி மாவட்டம், சுருளி அருவியில் வெள்ளிக்கிழமை முதல் குளிக்க புலிகள் காப்பகத்தினர் அனுமதி வழங்கினர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது புகழ்பெற்ற சுருளி அருவியில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருப்பதால் தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை தந்து அடர்ந்த வனப்பகுதியில் உள்ள அருவியில் நீராடி செல்வார்கள்.

வடகிழக்கு பருவமழை காரணமாக, புதன்கிழமை இரவு தொடர் மழை பெய்தது, இதனால் அருவியில் வியாழக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், புலிகள் காப்பகத்தினர் குளிக்க தடை விதித்தனர். 

தற்போது வெள்ளிக்கிழமை அருவியில் நீர் வரத்து குறைந்ததை அடுத்து கம்பம் கிழக்கு வனச்சரகத்தினர், வெள்ளிக்கிழமை குளிக்க அனுமதி அளித்தனர். அதன் பேரில் சுற்றுலா பயணிகள் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் குளித்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com