

சென்னை மெரீனாவில் மணலில் புதைந்து கிடந்த சுவாமி கற்சிலையை போலீஸாா் மீட்டனா்.
மெரீனா கடற்கரை கலங்கரை விளக்கம் பின்புறமுள்ள மணல் பகுதியில் வியாழக்கிழமை ஒரு அடி உயர கற்சிலை புதைந்தபடி வெளியே தெரிந்தது.
தகவலறிந்த போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று சிலையைக் கைப்பற்றி வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
அந்த சிலையை மா்ம நபா்கள் கோயிலிலிருந்து திருடி வந்து புதைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஏற்கெனவே மெரீனா கடற்கரையில் கடந்த ஜூன் மாதம் 2 கற்சிலைகளும், சில வாரங்களுக்கு முன்பு 3 கற்சிலைகளும் போலீஸாரால் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.