ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் 22 பேரை நிபந்தனையுடன் இலங்கை நீதிமன்றம் புதன்கிழமை விடுதலை செய்தது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் இருந்து கடந்த மாதம் 22-ஆம் தேதி மீன்பிடிக்க சென்றபோது ஒரு விசைப்படகு, தேவா, நடராஜன், நாகராஜன், சந்தியா, ஷிப்ரான் ஆகிய 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

இதே போன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 17 மீனவர்கள், மூன்று விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். ஒரே நாளில் நான்கு விசைப்படகுகள் 22 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், இன்று புதன்கிழமை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 5 ஆண்டுகளுக்குள் மீண்டும் கைது செய்யப்பட்டால் விடுதலை செய்யப்படாது என எச்சரித்து 22 மீனவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டனர்.
இருப்பினும், அவர்களின் 4 படகுகளையும் விடுவிக்க மறுத்துவிட்டனர்.

இதனைதொடர்ந்து, விடுதலை செய்யப்பட்ட 22 மீனவர்களும் யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். ஓரிரு நாள்களில் நாடு திரும்பவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்! - ஹபீபி படத்தைப் பாராட்டிய தனுஷ்!
ஹாலிவுட்டில் பயிற்சி, அம்மாவின் சிபாரிசு... விஜய் நேர்காணல் - 3!

மாட் ரென்ஷா, டிம் டேவிட் அதிரடி: வங்கதேசத்துக்கு 197 ரன்கள் இலக்கு!

கொல்கத்தா விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் மீது மின்னல் தாக்கியதால் பரபரப்பு
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



