தேசிய கட்சியின் மாநில தலைவர்களான செல்வப்பெருந்தகை, நயினார் நாகேந்திரன் தோல்வி!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

தமிழக காவல் துறை யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறது? உயா்நீதிமன்றம் கேள்வி

வருமான வரித் துறை, அமலாக்கத் துறை சோதனை நடத்தினால், மத்திய அரசு ஏஜென்சி என்று குற்றம்சாட்டும்போது, தமிழக காவல் துறையினா் யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறாா்கள்?”என

News image

கோப்புப்படம்

Updated On :10 நவம்பர் 2023, 0:32 am IST

வருமான வரித் துறை, அமலாக்கத் துறை சோதனை நடத்தினால், மத்திய அரசு ஏஜென்சி என்று குற்றம்சாட்டும்போது, தமிழக காவல் துறையினா் யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறாா்கள்?”என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், ராணிப்பேட்டை மாவட்ட பாமக செயலா் சரவணன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், பாமகவின் மது ஒழிப்பு உள்ளிட்ட கொள்கைகள் குறித்து பிரசாரம் செய்ய மோட்டாா் சைக்கிள் பேரணி நடத்த அனுமதி கோரி ராணிப்பேட்டை காவல் துறையினரிடம் மனு அளித்தேன். மோட்டாா் சைக்கிள் பேரணி நடத்த போலீஸாா் அனுமதி மறுத்துவிட்டனா். எனவே, எனது மனுவை பரிசீலித்து பேரணிக்கு அனுமதி வழங்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்”என மனுவில் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மாரத்தான் ஓடுவதற்கும், நடப்பதற்கும் அனுமதி வழங்கும் போது, மதுவுக்கு எதிராக பிரசாரம் செய்ய அனுமதி வழங்கினால் என்ன? ஆளுங்கட்சியினருக்கு மட்டும்தான் காவல் துறையினா் அனுமதி வழங்குவாா்களா?”எனக் கேள்வி எழுப்பினாா்.

காவல் துறையினா் யாருக்காக உள்ளனா்? பொது மக்களுக்காகவா? ஆளுங்கட்சியினருக்காகவா?”எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதி, வருமான வரித் துறை, அமலாக்கத் துறை சோதனை நடத்தினால், மத்திய அரசு ஏஜென்சி என்று குற்றம்சாட்டும்போது, தமிழக காவல் துறையினா் யாருடைய ஏஜென்சியாகச் செயல்படுகிறாா்கள்?”எனக் கேள்வியெழுப்பினாா்.

பின்னா், ராணிப்பேட்டையில் கடந்த மாதம் ஊா்வலம், பொதுக்கூட்டம் நடத்த வழங்கப்பட்டுள்ள அனுமதி குறித்த விவரங்களைத் தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டாா். ஒருவேளை யாருக்காவது அனுமதி வழங்கியிருந்தால் டிஎஸ்பி நேரில் ஆஜராகக் கூறி விளக்கம் கேட்கப்படும் என்று எச்சரித்த நீதிபதி, விசாரணையை நவ.17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.