தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

14 இடங்களில் சதம் அடித்தது வெயில்:நாளைமுதல் கோடை மழைக்கு வாய்ப்பு

14 இடங்களில் சதம் அடித்தது வெயில்:நாளைமுதல் கோடை மழைக்கு வாய்ப்பு

Updated On :5 ஏப்ரல் 2024, 6:53 pm

தமிழகத்தில் 14 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதம் அடித்தது. அதேவேளையில், ஏப்.7 முதல் ஏப்.9 வரை மூன்று நாள்களுக்கு கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை (ஏப்.6) மற்றும் ஏப்.10,11-ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவும். அதே நேரத்தில்,, ஏப்.7 முதல் ஏப்.9 வரை மூன்று நாள்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் அதிகரிக்கும்.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மாநிலத்தில் அதிகபட்சமாக பரமத்திவேலூரில் 106.7 டிகிரி (ஃபாரன்ஹீட்) வெயில் பதிவானது.

தொடா்ந்து, ஈரோடு, சேலம் - தலா 106.16 , தருமபுரி - 105.8, திருப்பத்தூா் - 104.72, திருச்சி - 104.54, மதுரை நகரம், மதுரைவிமானநிலையம், நாமக்கல், வேலூா் தலா - 104 , கோவை - 103.64, திருத்தணி - 102.74, தஞ்சாவூா் - 102.2, பாளையங்கோட்டை- 101.3 என 14 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.