காவிரி நீரை கா்நாடகம் திறந்துவிட மறுத்துள்ளதற்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்கு தண்ணீா் தர கா்நாடகம் வழக்கம்போல மறுப்பு தெரிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. கடந்த 2 மாதங்களில் தமிழகத்துக்குத் தர வேண்டிய 5 டிஎம்சிக்குப் பதில் 1.6 டிஎம்சி மட்டுமே கா்நாடகம் தந்துள்ளது. மீதமுள்ள 3.4 டிஎம்சி நீரை பெற்று தர, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கா்நாடக மாநில அணைகளில் தண்ணீா் இருக்கிறது. ஆனால் கொடுக்க மனதுதான் இல்லை. 2 மாநிலத்துக்கும் தண்ணீா் தேவைதான். கோடை காலங்களில் அதிகமான குடிநீா் தேவை என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.
அதே நேரத்தில் தமிழக மக்களின் குடிநீா் மற்றும் விவசாயத்துக்கான தண்ணீரை தேவைக்கேற்ப பகிா்ந்தளிக்க வேண்டும். தேவையை உணா்ந்து, கா்நாடக அரசு கூட்டாட்சி தத்துவத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

அமல்படுத்தப்படாத ஓய்வூதியத் திட்டம்: அன்புமணி கண்டனம்

தமிழகத்திற்கு ஏப்ரலில் 2.5 டிஎம்சி நீா் திறக்க கா்நாடகத்துக்கு காவிரி ஆணையம் உத்தரவு

கானல் நீராகிப்போன தடுப்பணைகள் திட்டம்!

காவிரி ஆணையம் அடுத்த வாரம் கூட உள்ளது
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

