எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பாலியல் தொல்லை: முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு ஒத்திவைப்பு

பாலியல் தொல்லை வழக்கில், முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணை ஜனவரி 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ்

Updated On :7 பிப்ரவரி 2024, 8:50 pm IST

விழுப்புரம்: பாலியல் தொல்லை வழக்கில், முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணை ஜனவரி 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை ஜனவரி 18 - ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

2021-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வரின் பாதுகாப்புப் பணியிலிருந்த பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் மீதும், புகாரளிக்கச் சென்ற பெண் எஸ்.பி.யை தடுத்து நிறுத்தியதாக  அப்போது செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றிய கண்ணன் மீதும் சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிந்தனர்.

வழக்கை விசாரித்த விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கடந்தாண்டு ஜூன் 16-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதில், ஓய்வுபெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு இரு பிரிவுகளின் கீழ் தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை (ஏககாலம்) எஸ்.பி. கண்ணனுக்கு ஒரு பிரிவில் ரூ.500 அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில்ஒய்வு பெற்ற சிறப்பு டிஜிபி, எஸ்.பி. சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், இந்த மேல்முறையீட்டு வழக்கை வேறு மாவட்டத்துக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருப்பதாகத் தெரிவித்ததால், டிசம்பர் 19-ஆம் தேதியும், அதைத் தொடர்ந்து ஜனவரி 6-ஆம் தேதியும்  விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 6-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது ஓய்வு பெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் நீதிமன்றத்தில் ஆஜரனார்.அப்போதும் உயர்நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்ததால் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஜனவரி 12-ஆம் தேதி வழங்கப்படும் என முதன்மை மாவட்ட நீதிபதி ஆர்.பூர்ணிமா அறிவித்து, விசாரணையை ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், பாலியல் தொல்லை வழக்கு விசாரணையை வேறு மாவட்டத்துக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜேஷ்தாஸ் தாக்கல் செய்த மனுவை ஜனவரி 9--ஆம்தேதி விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது ஓய்வுபெற்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை  ஜனவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். பூர்ணிமா, அன்றைய தினம் ஒய்வு பெற்ற சிறப்பு டிஜிபி தரப்பில் வாதிடுவதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.