காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாற்று மேம்பாலத்தில் லாரி பழுதானதால் 2 கி.மீ. தொலைவுக்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் சாலையில் உள்ள செவிலிமேடு பாலாற்று மேம்பாலத்தில் லாரி ஒன்று பழுதாகி நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வந்தவாசியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி வந்த லாரியின் முன்புற டயர் திடீரென கழன்று ஓடியது. ஓட்டுநர் சாமர்த்தியமாக செவிலிமேடு பாலாற்று மேம்பாலத்தின் நடுப்பகுதியில் லாரியை நிறுத்தினார். மேம்பாலத்தின் நடுவில் லாரி பழுதாகி நின்றதால் மேம்பாலத்தின் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
போக்குவரத்து நெரிசல் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவு வரை நீடித்ததால், வேலைக்குச் செல்வோர் மற்றும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி, பழுதான லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து நீண்ட நேரத்திற்குப் பிறகு போக்குவரத்து சீரானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போக்குவரத்து நெரிசல்: ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்குச் செல்ல தாமதமானதால் இளைஞர் பலி!

கம்பம்-கம்பம்மெட்டு சாலையில் ஜூன் 8 முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை திரும்பும் மக்கள்! செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்!






