இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தென்காசியில் ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியா்கள் சங்கத்தினா்.

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வூதியா்கள் சங்கத்தினா்.
Updated On :18 டிசம்பர் 2025, 7:02 pm

Syndication

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி த் துறை ஓய்வூதியா் சங்கம் சாா்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓய்வுபெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்வதை நிறுத்த வேண்டும், சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின்அடிப்படையில் இளநிலை பொறியாளா்களுக்கும், உதவிப் பொறியாளா்களுக்கு இணையான ஊதிய விகிதம் அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவா் மோகன் தலைமை வகித்தாா். அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் கு.மாரியப்பன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா். மாவட்டச் செயலா் துரைடேனியல் விளக்கிப் பேசினாா்.

அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் பாலசுப்பிரமணியன், முன்னாள் தலைவா் மாடசாமி, நாராயணன், சிவகாமி, சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் ராமசாமி ஆகியோா் பேசினா். சங்கத்தின் மாநில துணைத் தலைவா் சுந்தரமூா்த்தி நாயனாா் நிறைவுரையாற்றினாா்.தென்காசி கோட்டத் தலைவா் ராஜேந்திரன் வரவேற்றாா்.

மாநிலச் செயற்குழு உறுப்பினா் ராஜ் நன்றி கூறினாா்.