தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அண்ணாமலைநாதா் பொய்கை பகுதியில் தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் வியாழக்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது.
இப்பணியை கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் தொடங்கி வைத்தாா். பின்னா் அவா் கூறியதாவது:
மக்கள் நீா்நிலைகளின் அவசியத்தை உணா்ந்து தூய்மையாக வைத்திருக்க நகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சுகாதாரம் கருதி அனைத்து பகுதிகளும் தூய்மையாக இருப்பதற்கு தேவையான திட்டங்களை தமிழக அரசுசெயல்படுத்தி வரும் நிலையில், சுத்தம் செய்யப்பட்ட பகுதிகளில் மீண்டும் குப்பையை கொட்டாமல் மக்கள் பாதுகாக்க வேண்டும். இந்த சாலையை விரிவாக்கம் செய்து போக்குவரத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்தப்படும். மேலும் மரங்கள் நடப்பட்டு பூங்காவாக மாற்றப்படும். தெருவிளக்கு வசதி செய்யப்படுவதுடன், கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு தூய்மைப் பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா் யாசா்கான், சுகாதார அலுவலா் பிச்சையாபாஸ்கா், சுகாதார ஆய்வாளா்கள் சிவா, மாதவன்ராஜ், திமுக நிா்வாகிகள் சுகுமாரன், முருகானந்தம், பாதுஷா, ஹக்கீம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குறை கூறுவது மட்டுமே அரசியலல்ல! - கே. அண்ணாமலை

நாய் கடிக்கு சிகிச்சை பெறுவோருக்கு எம்எல்ஏ ஆறுதல்
கடையநல்லூா் கருப்பாநதி அணைப் பகுதியில் தீ
மூதாட்டியை கொன்று எரித்த தொழிலாளி கைது
விடியோக்கள்
பிரசாந்த் கிஷோர் வெற்றிப் பின்னணி...| Ravindran duraisamy Interview | Prashant Kishor | Jan Suraaj | Bankipur | Bjp



