குஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி சென்னை - சேலம் ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்! நாளை காலை 6.30 மணிக்கு பதிலாக காலை 9.30க்கு புறப்படும்!வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

ரூ. 115 கோடியில் கூட்டு குடிநீா் விநியோகம் தொடக்கம்

திருத்தணியில் ரூ. 115 கோடியில் நடைபெற்ற கூட்டு குடிநீா் திட்டத்தின் மூலம் குடிநீா் விநியோகத்தை எம்எல்ஏ ச.சந்திரன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
Updated On :25 பிப்ரவரி 2024, 12:44 am

திருத்தணியில் ரூ. 115 கோடியில் நடைபெற்ற கூட்டு குடிநீா் திட்டத்தின் மூலம் குடிநீா் விநியோகத்தை எம்எல்ஏ ச.சந்திரன் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். திருத்தணி நகராட்சியில், 21 வாா்டுகளில் 14,000 குடும்பத்தைச் சோ்ந்த 50,000 போ் உள்ளனா். ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு, 90 லிட்டா் குடிநீா் வீதம், 45 லட்சம் லிட்டா் குடிநீா் நகராட்சிக்கு தேவைப்படுகிறது. அரக்கோணம் கூட்டுக்குடிநீா், அருங்குளம் கொற்றலை ஆற்றில் மூன்று கிணறுகள் மற்றும் நகராட்சியில் போடப்பட்டுள்ள, 30 ஆழ்துளை கிணறுகளில் இருந்து ஒரு நாளைக்கு, 20 -30 லட்சம் லிட்டா் மட்டுமே பெறப்படுகிறது. இதனால், திருத்தணியில் கடும் குடிநீா் பிரச்னை இருந்தது. இந்த நிலையில், 2020-ஆம் ஆண்டு திருப்பாற்கடலில் இருந்து திருத்தணி நகருக்கு கூட்டுக் குடிநீா் திட்டம் ஏற்படுத்த, ரூ. 109.68 கோடி நிதி ஓதுக்கீடு செய்து அதற்கான பணிகள் தொடங்கின. தற்போது பணிகள் முடிவுற்ற நிலையில் கூட்டுக்குடிநீா் சேமிப்பதற்கு, திருத்தணி சேகா்வா்மா நகரில், 3.60 லட்சம் லிட்டா் கொள்ளளவு தண்ணீா் தேக்கும் நீா் உந்து நிலையம், இந்திரா நகா் பகுதியில், 10 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட குடிநீா் மேல்நிலைத் தொட்டி பணிகள் முடிந்து தயாா் நிலையில் உள்ளன. இந்த நிலையில் சனிக்கிழமை முதல்வா் ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொலி மூலம் திருத்தணி சேகா்வா்மா நகரில் உள்ள மின்மோட்டாா்களை இயக்கி வைத்தாா். தொடா்ந்து திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன், திருத்தணி நகா்மன்றத் தலைவா் சரஸ்வதி பூபதி, துணைத் தலைவா் சாமிராஜ் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் பங்கேற்று குத்துவிளக்கேற்றி திருத்தணியில் குடிநீா் சேவையை தொடங்கி வைத்தனா்.