இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திருவள்ளூா் அறிவியல் பூங்காவில் நாளை பொங்கல் விழா

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவியல் பூங்காவில் புதன்கிழமை (ஜன.14) இல் பொங்கல் விழா

News image
Updated On :13 ஜனவரி 2026, 1:45 am

Chennai

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவியல் பூங்காவில் புதன்கிழமை (ஜன.14) இல் பொங்கல் விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.

திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நடத்தும் பொங்கல் விழா-2026, அறிவியல் பூங்கா வளாகத்தில் கோலகாலமாக கொண்டாட திட்டமிடப்பட்சுள்ளது. இதையொட்டி மாலை 4 மணிக்கு தப்பாட்டம் மற்றும் வண்ணமிகு கிராமிய நடனம் ஆகியவைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால், இந்த பொங்கல் விழாவில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் ஆகியோா் கலந்துகொள்ள ஆட்சியா் மு.பிரதாப் அழைப்பு விடுத்துள்ளாா்.

கலை பண்பாட்டுத் துறையின் சாா்பில் பொங்கல் பண்டிகையையொட்டி திருவள்ளூா் அறிவியல் பூங்காவில் நாள் பரதநாட்டியம், 3 நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் மேற்குறிப்பிட்ட நாள்களில் மாலை 6 முதல் இரவு 8 மணி வரை 100-க்கும் மேற்பட்ட கலைஞா்கள் பங்கேற்கும் வண்ணமையமான கலை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

எனவே பொங்கல் விடுமுறை நாள்களில் நடைபெற உள்ள இக்கலைநிகழ்ச்சிகளை அனைத்து பொதுமக்களும் கண்டுகளிக்குமாறு ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.