தமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!தமிழக பட்ஜெட் 2026! அரசு ஊழியர்களுக்கு புதிய திட்டம் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: அண்ணனின் சீர், தாய் கேர்... பெண்களுக்கான திட்டங்கள்!பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

கை ராட்டைக்கு முக்கியத்துவம் தரும் காந்தி ஜெயந்தியின் சுவாரஸ்யப் பின்னணி!

மகாத்மா தனது பிறந்த நாளை கை ராட்டை தினமாகக் கொண்டாட சம்மதித்ததாகக் கூறப்படுகிறது. கை ராட்டை என்பது அந்தக் காலத்தில் ஏழை மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்ந்த புனிதக்கருவி.

News image
Updated On :28 ஜூலை 2025, 9:58 am IST

இன்று காந்தி ஜெயந்தி இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தி பிறந்த நாள். இது இந்தியாவில் அறிவிக்கப்பட்ட தேசிய விடுமுறை தினம். இந்நாள் ஆண்டுதோறும் இந்தியாவில் தேசிய அளவில் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஜூன் 15, 2007 ல் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் படி இந்நாள் "அனைத்துலக வன்முறையற்ற நாளாக’ சர்வதேச அளவில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

நூற்பு வேள்வி...

Story image

நம் தேசப்பிதாவான காந்தி மகாத்மாவின் பிறந்தநாளைக் கொண்டாட அவர் மீதும் அவர் மேற்கொண்ட சுதந்திரப் போராட்ட முறைகளின் மீதும் பெருமதிப்பும், அபிமானமும் கொண்ட கோடிக்கணக்கான மக்கள் விரும்பிய போதும் மகாத்மா அதை ஒருபோதும் விரும்பினாரில்லை. ஆனால், இந்திய சுதந்திரத்துக்கு வித்திட்ட இந்த மாமனிதரின் பிறந்தநாளை நாடு எப்பாடுபட்டேனும் நினைவுகூர்தல் வேண்டும் என்று தேச விடுதலைக்காகப் போராடிய தலைவர்கள் பலர் விரும்பியதால் அவர்களின் முயற்சி மற்றும் வற்புறுத்தலின் காரணமாக மகாத்மா தனது பிறந்த நாளை கை ராட்டை தினமாகக் கொண்டாட சம்மதித்ததாகக் கூறப்படுகிறது. கை ராட்டை என்பது அந்தக் காலத்தில் ஏழை மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்ந்த புனிதக்கருவி. இந்தக் கை ராட்டையை நம்பியே அண்ணல் தமது அந்நிய துணிகள் பகிஸ்கரிப்பு போராட்டத்தை தீரத்துடன் முன்னெடுத்தார்.  மகாத்மாவுக்கு கை ராட்டையின் மீதிருந்த பற்றின் காரணமாக அவரது பிறந்த நாளை முன்னிட்டு 24 மணி நேர நூற்பு வேள்வி நிகழ்த்தப்பட்டது. 1969 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ரா. கிருஷ்ணசாமி நாயுடு தலைமையில் நடைபெற்ற காந்திஜி நூற்றாண்டு விழா நூற்பு வேள்வியில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்று கைராட்டையில் நூல் நூற்று விழாவைச் சிறப்பித்தனர்.

ரா.கிருஷ்ணசாமி அவர்கள் பயன்படுத்திய பெட்டி ராட்டை...

Story image

மகாத்மாவுக்கு கைராட்டையின் மீதிருந்த ப்ரியம் உலகறிந்த உண்மை. ஆரம்பத்தில் வடிவமைக்கப்பட்ட இந்திய தேசியக் கொடியின் மையத்தில் நாம் இன்று காணும் அசோகச் சக்கரத்திற்குப் பதிலாக இடம்பெற்றிருந்தது கைராட்டையே! ஆந்திராவைச் சேர்ந்த பிங்கலி வெங்கையா எனும் சுதந்திரப் போராட்ட வீரர் வடிவமைத்த பல்வேறு விதமான இந்திய தேசியக் கொடி மாதிரிகளில் கைராட்டைக் கொடியே இந்திய சுதந்திரத்திற்கு முன்பு வரையிலும் பயன்பாட்டில் இருந்தது. ஜாலியன் வாலாபாக் படுகொலையை எதிர்த்து 1923 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று நாக்பூரில் நடைபெற்ற பேரணியில் இக்கொடியே ஏந்திச் செல்லப்பட்டது. இந்தக்கொடிக்கு சுவராஜ்யக் கொடி என்று பெயர். 

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்பு டாக்டர்.ராஜேந்தாரபிரசாத், மௌலானா அபுல்கலாம்ஆசாத், சரோஜினி நாயுடு, ராஜாஜி, கே.எம்.முன்ஷி, அம்பேத்கார் ஆகியோரைக்கொண்ட குழு தேசியக்கொடியில் ஒரு சிறு மாற்றத்தைக் கொண்டுவந்தது.அதன்படி கைராட்டைக்கு பதிலாக அசோகச் சக்கரம் அப்போது முதல் பயன்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.