மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

சிறை செல்வது பதவிக்கு அனுமதிச் சீட்டல்ல!

உண்மையான ஆபத்து என்ற மகுடத்தின் கீழ் மகாத்மா காந்தி பின்வருமாறு எழுதியுள்ளார்:

News image
Updated On :24 ஜனவரி 2019, 1:28 am IST

உண்மையான ஆபத்து என்ற மகுடத்தின் கீழ் மகாத்மா காந்தி பின்வருமாறு எழுதியுள்ளார்:
உள்ளுக்குள் இருக்கும் அபாயத்தை எடுத்துக் காட்டுவதுதான் இங்கு என்னுடைய நோக்கம்.
முதலாவதாயுள்ள முக்கியமான அபாயம் மனதையும் உடலையும் பற்றியுள்ள சோம்பேறித்தனம். சிறைத் தண்டனை அனுபவித்தபின் சுதந்திரத்தைப் பெற வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை என்ற போலி திருப்தியினாலேயே இந்த சோம்பேறித்தனம் ஏற்படுகிறது. சிறைவாசம் அனுபவித்ததற்காக ஸ்தாபனம் நன்றியறிதலுடன், தேர்தல், பதவிகள் விஷயத்தில் தங்களுக்கு முதல் சலுகை காட்டி தங்கள் சேவைக்கு வெகுமானம் அளிக்கவேண்டுமென நினைத்துவிடுகிறார்கள்.
ஆகையால் பரிசுப் பதவிகளைப் பெற கேவலமான போட்டிகள் ஏற்படுகின்றன. உண்மையில் இது முட்டாள்தன
மாகும். காங்கிரஸ் அகராதியில் பரிசு என்று எதையும் கருதக்கூடாது. 
சிறைத் தண்டனையே அதன் பிரதிப்பிரயோசனம். ஒரு ஸத்யாக்ரஹியின் பூர்வாங்கப் பரிட்சை இது. அதன் லக்ஷியம் மாசற்ற ஆட்டுக் குட்டியின் பலிபீடம் போன்றது. இதற்குப் பதிலாக, காங்கிரஸுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு பதவிக்கும் சிறைவாசம் ஒரு அனுமதிச் சீட்டாக உபயோகிக்கப்படுகின்றது. 
இப்படிச் செய்தால் ஒரு ஸத்யாக்ரஹியின் சிறை
வாசம் திருட்டையும், கொள்ளைகளையுமே தொழிலாகக் கொண்டவர்களைப் போல கேவலமான ஒரு தொழிலாகிவிடக் கூடும்.

தினமணி (14-07-1946)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.