பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 74.55 அடியாக உயர்ந்துள்ளது.வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!
/

அட்டூழியங்களை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்

இன்றைய பிரார்த்தனைக் கூட்டத்தில் மகாத்மா காந்தி, பாகிஸ்தானின் அட்டூழியங்கள் பற்றிக் குறிப்பிட்டு பேசியதாவது:

News image
Updated On :28 ஜூலை 2025, 9:58 am IST

இன்றைய பிரார்த்தனைக் கூட்டத்தில் மகாத்மா காந்தி, பாகிஸ்தானின் அட்டூழியங்கள் பற்றிக் குறிப்பிட்டு பேசியதாவது:

""கராச்சியில் சீக்கியர் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். நிரபராதியான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் படுகொலை செய்யப்பட்டு சூறையாடப்பட்டனர். மற்றவர்கள் ஓட நேர்ந்தது. குஜராத்தில் ஓர் அகதி ரயில் தாக்கப்பட்டிருப்பதாக இப்பொழுது செய்தி கிடைத்திருக்கிறது. இந்த ரயிலில் முஸ்லிமல்லாத அகதிகள் வந்துகொண்டிருந்தனர். இந்தத் தாக்குதலில் ஏராளமான அகதிகள் கொல்லப்பட்டதாகவும் பெண்கள் கடத்திச் செல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது எனக்கு பெரும் துயரம் அளிக்கிறது. இந்திய யூனியன் எவ்வளவு காலம் சகித்துக் கொண்டிருக்க முடியும்? என் உபவாசத்தை மீறி, ஹிந்து, சீக்கியரின் பொறுமையை நான் எவ்வளவு காலம் நம்பியிருக்க முடியும்? இந்த நிலைமைக்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அவர்கள் தங்கள் ஹிருதயத்தை பரிசுத்தம் செய்துகொண்டு, ஹிந்துக்களும், சீக்கியரும் பாகிஸ்தானுக்குத் திரும்பிச் சென்று அமைதியாக வாழும்படி செய்யும்வரை ஓய்வு ஒழிவு இன்றி உழைப்பதாக பிரதிக்ஞை செய்துகொள்ள வேண்டும்.

இந்தியா முழுமையிலும் ஆத்மசுத்தி இயக்கம் நடப்பதாக வைத்துக்கொள்வோம். அப்பொழுது பாகிஸ்தானில் உள்ளவர்கள் பழைய தவறுகளை மறந்துவிடுவார்கள். பழைய வேற்றுமைகள் குழி தோண்டி புதைக்கப்பட்டுவிடும். பாகிஸ்தானில் காயிதே ஆஜமின் உயிருக்கும் சொத்துக்கும் எவ்வளவு பாதுகாப்பு அளிக்கப்படுகிறதோ அவ்வளவு பாதுகாப்பு மிகச் சிறியோருக்கும் கடையோருக்கும் கூட அளிக்கப்படும். இத்தகைய பாகிஸ்தான் அழியவே அழியாது. "பாகிஸ்தான் ஒரு பாவம்' என்று கூறியதற்காக பாகிஸ்தானில் இத்தகைய நிலை ஏற்படும்வரை நான் வருந்தவேண்டியதில்லை. அது உண்மையே என்று இப்பொழுது நான் நினைக்க வேண்டியிருக்கிறது.


தினமணி (15-01-1948)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.