பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 74.55 அடியாக உயர்ந்துள்ளது.வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!
/

முதல் நாளே முடிவை அறிந்த காந்திஜி!

மகாத்மா காந்தி 1948 ஜனவரி 30-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை பிரார்த்தனைக் கூட்டத்துக்கு சென்று கொண்டிருந்த போது நாதுராம்

News image
Updated On :28 ஜூலை 2025, 9:58 am IST


மகாத்மா காந்தி 1948 ஜனவரி 30-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை பிரார்த்தனைக் கூட்டத்துக்கு சென்று கொண்டிருந்த போது நாதுராம் கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்ட விவரங்களை அவரது பேத்தி மனு காந்தி பின்வருமாறு கூறினார்:
பிரார்த்தனை மேடையின் படியில் மகாத்மாஜி ஏறும்பொழுது ஜனங்களின் வரிசையிலிருந்து கொலைகாரன் குதித்து முன்வந்தான். அவன் மகாத்மாஜியின் முன் குனிந்தான். அவருடைய பாதத்தூளியை எடுக்கத் தான் முயற்சிக்கிறான் என்று நினைத்தேன். அப்பொழுதும் காந்திஜி நடந்துகொண்டே இருந்ததால் அவனை அவ்விதம் செய்யாமல் தடுக்க முயன்றேன். அதற்குள் அவன் ஒரு கைத்துப்பாக்கியை எடுத்து காந்திஜியை நோக்கி சுடத் தொடங்கினான். உடனே மகாத்மாஜி ஹே ராம், ஹே ராம் என்று ஜபிக்கத் தொடங்கிவிட்டார். மற்றொரு தோட்டாவும் அவருடைய வயிற்றில் பாய்ந்தது. மூன்றாவது தோட்டா மார்பில் பாய்ந்தது. உடனே அவர் மல்லாந்து வீழ்ந்தார். அவருடைய மூக்குக் கண்ணாடி சிதறிப் போயிற்று. காலில் இருந்த செருப்பு கழன்றுவிட்டது. 
காயங்களிலிருந்து ரத்தம் பொங்கிக்கொண்டு வந்தது. அண்ணலை நாம் இழந்து விட்டோம்.
தம்முடைய அந்திம காலம் நெருங்கி விட்டது என்பதை வியாழக்கிழமையன்று இரவே காந்திஜி அறிந்துவிட்டார் போலும். அன்று படுக்கைக்கு போகும் முன்பு குஜராத்திப் பாட்டு ஒன்றை பாடினார். வெள்ளிக்கிழமையன்று காலை எழுந்தவுடனேயே முக்கியமான கடிதங்களுக்கு பதில் எழுதிவிட வேண்டுமென்று கூறி, அவற்றைக் கொண்டுவரச் சொன்னார்.

தினமணி (01-02-1948)

தினமணி நாளிதழில் வெளியான (1934-1948) காந்திஜி குறித்த செய்திகளின் தொகுப்பு இன்றுடன் நிறைவு பெறுகிறது 
- ஆசிரியர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.