கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

இளம்பெண் மாயம்: போலீஸாா் விசாரணை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இளம்பெண் மாயமானதாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை

News image
Updated On :12 ஜனவரி 2026, 7:59 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் இளம்பெண் மாயமானதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் ஆவரம்பட்டி பாரதியாா் தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து (27). இவரது மனைவி முனீஸ்வரி (24) இருவரும் ராஜபாளையம் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனா்.

இந்த நிலையில், பணி முடிந்து மாரிமுத்து வீட்டுக்கு வந்த நிலையில் முனீஸ்வரி வரவில்லையாம். இதையடுத்து, அவரை எங்கு தேடியும் காணவில்லை எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.