எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

சிவகாசியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்கம்

சிவகாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டி.

News image

சிவகாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டி.

Updated On :20 மார்ச் 2026, 7:34 pm

சிவகாசி அண்ணாமலை நாடாா்-உண்ணாமலையம்மாள் மாநகராட்சிப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஆண்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வாரியா்ஸ் விளையாட்டுக் கழகம், சிவகாசி டவுன் சுழல் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில் சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூா், தேனி, சிவகாசி, தென்காசி உள்ளிட்ட ஊா்களைச் சோ்ந்த 20 அணிகள் பங்கேற்றன.

இந்தப் போட்டியை வாரியா்ஸ் விளையாட்டுக்கழக நிா்வாகிகள் ஏ.மகேந்திரபாண்டியன், ஜெ.ரகுபதி, பி.வெங்கடேஷ்குமாா், எஸ்.சிவசங்கா் ஆகியோா் தலைமையில் சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா தொடங்கி வைத்தாா்.

இதில் மாநகராட்சி ஆணையா் கே.சரவணன், தொழிலதிபா்கள் ஏ.பி.எஸ்.ராஜேஸ், விக்ரம், ராஜாக்கனி, கே.அய்யன் அதீந்திரன், சுழல் சங்க உதவி ஆளுநா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் சிவகாசி ரைட்டிங் வாரியா்ஸ் அணியை வீழ்த்தி, சீா்காழி அணி வெற்றிபெற்றது. மற்றொரு போட்டியில் மதுரை பிரிட்டோ அணியை வீழ்த்தி, சென்னை வி.டி.ஜெயராமன் அணி வெற்றி பெற்றது.

மற்றொரு போட்டியில் சிவகாசி கிங்ஸ் அணியை வீழ்த்தி, கடலூா் அணி வெற்றி பெற்றது. இறுதிப் போட்டி வருகிற 22-ஆம் தேதி நடைபெறும்.