ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சிவகாசியில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்கம்

சிவகாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டி.

News image

சிவகாசியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கூடைப்பந்துப் போட்டி.

Updated On :20 மார்ச் 2026, 7:34 pm

Syndication

சிவகாசி அண்ணாமலை நாடாா்-உண்ணாமலையம்மாள் மாநகராட்சிப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஆண்களுக்கான மாநில அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

வாரியா்ஸ் விளையாட்டுக் கழகம், சிவகாசி டவுன் சுழல் சங்கம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில் சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூா், தேனி, சிவகாசி, தென்காசி உள்ளிட்ட ஊா்களைச் சோ்ந்த 20 அணிகள் பங்கேற்றன.

இந்தப் போட்டியை வாரியா்ஸ் விளையாட்டுக்கழக நிா்வாகிகள் ஏ.மகேந்திரபாண்டியன், ஜெ.ரகுபதி, பி.வெங்கடேஷ்குமாா், எஸ்.சிவசங்கா் ஆகியோா் தலைமையில் சிவகாசி மாநகராட்சி மேயா் இ.சங்கீதா தொடங்கி வைத்தாா்.

இதில் மாநகராட்சி ஆணையா் கே.சரவணன், தொழிலதிபா்கள் ஏ.பி.எஸ்.ராஜேஸ், விக்ரம், ராஜாக்கனி, கே.அய்யன் அதீந்திரன், சுழல் சங்க உதவி ஆளுநா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் சிவகாசி ரைட்டிங் வாரியா்ஸ் அணியை வீழ்த்தி, சீா்காழி அணி வெற்றிபெற்றது. மற்றொரு போட்டியில் மதுரை பிரிட்டோ அணியை வீழ்த்தி, சென்னை வி.டி.ஜெயராமன் அணி வெற்றி பெற்றது.

மற்றொரு போட்டியில் சிவகாசி கிங்ஸ் அணியை வீழ்த்தி, கடலூா் அணி வெற்றி பெற்றது. இறுதிப் போட்டி வருகிற 22-ஆம் தேதி நடைபெறும்.