ஆன்மிகத்துக்கும் மருத்துவத்துக்கும் தொடர்பு உண்டு. அந்த வகையில், பௌர்ணமி நாள்களில் எந்தெந்த கிழமைகளில், எந்தெந்த மலர்களைக் கொண்டு சக்தியை வழிபட்டால் தீரும் நோய்களும், கிடைக்கும் பலன்களும் பின்வருமாறு:
ஞாயிற்றுக்கிழமை வரும் பௌர்மணியன்று சக்தியை செந்தாமரையால் வழிபட நோய்கள் தீர்ந்து, ஆரோக்கியம் மேம்படும்.
திங்கள்கிழமை பௌர்ணமியன்று சக்தியை மந்தார மலர்களால் வழிபட குடும்பத்தில் செல்வம், பதவி உயர்வு கிடைக்கும்.
செவ்வாய்க்கிழமையன்று வரும் பௌர்ணமியில் சக்தியை சிகப்பு நிற அரளி, ரோஜா மலர்களால் வழிபட நவக்கிரகக் கோளாறுகள் நீங்கும்.
புதன்கிழமையன்று வரும் பௌர்ணமியில் சக்தியை கதம்ப மலர்களால் வழிபட குழந்தை செல்வமும் ஆரோக்கியமும் கிடைக்கும்.
வியாழன்று வரும் பௌர்ணமியன்று சக்தியை முல்லை மலர்களால் வழிபட வெற்றி, வேலைவாய்ப்பு கிடைக்கும்.
வெள்ளியன்று வரும் பௌர்ணமியில் சக்தியை வெண்ணிற மலர்களால் வழிபட குடும்ப ஒற்றுமை மேம்படும்.
சனிக்கிழமையன்று வரும் பௌர்ணயில் சக்தியை நீலநிற மலர்களால் வழிபட வெற்றி, கீர்த்தி, புகழ் கிட்டும்.