உருளைக்கிழங்கு பொரியலுக்கு தாளிக்கும் போது வெந்தயம், ஓமம், சீரகம் மூன்றையும் வறுத்துப் பொடி செய்து தாளித்தால், பொரியல் கமகமவென இருக்கும்.
சர்க்கரைப் பொங்கல் செய்யும் போது வெல்லம் அதிகமாகி விட்டால், உடனே ஒரு டம்ளர் காய்ச்சிய பாலை விட்டு அடுப்பில் வைத்துக் கிளறினால் சரியாகிவிடும்.
சப்பாத்தி செய்யும்பொழுது, மீந்துபோன தேங்காய்த் துவையல், கொத்துமல்லித் துவையல் போன்றவற்றை சப்பாத்தி மத்தியில் பரவலாக வைத்து, லேசாக அப்பளமாக இட்டு கல்லில் போட்டு எண்ணெய் விட்டு செய்ய... மாறுதலான சுவையுடன் சப்பாத்தி தயார்.
மெதுவடை செய்ய கறிவேப்பிலை இல்லையென்றால், முருங்கை இலை சிறிது எடுத்து உளுந்துமாவில் கலந்து செய்து பாருங்கள். வடை சுவையாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






