சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

கதை பாடல்!: தந்தை சொல்லே மந்திரம்!

செல்லன் என்னும் பெயருள்ள சிறுவன் ஒருவன் தன் தந்தைசொல்லும் சொல்லைக் கேளாமல்

News image
Updated On :30 ஜனவரி 2024, 11:16 pm IST

செல்லன் என்னும் பெயருள்ள 
சிறுவன் ஒருவன் தன் தந்தை
சொல்லும் சொல்லைக் கேளாமல்
சுற்றிச் சுற்றி வந்திட்டான்!

பள்ளிக்கூடம் சென்றாலும்
பாடம் தன்னைப் படிக்காமல்
உள்ளம் போன போக்கினிலே
ஊரைச் சுற்றி வந்திட்டான்!

""கல்வியைக் கற்றுக் கொள்ளாமல்
காட்டில் மேட்டில் அலைகின்றாய்!...
.... சொல்வதை நீயும் கேட்காமல்
சும்மா இருப்பதும் முறைதானோ?...

.... சின்னஞ்சிறிய வயதினிலே
சீராய்க் கல்வியைக் கற்றிட்டால்
என்றும் நன்மை வந்திடுமே
ஏற்றம் தருமே!...'' என்றிட்டார்!

தந்தை சொன்ன நற்சொல்லை
தனயன் செல்லன் கேட்காமல்
வந்தான் ஒரு நாள் வீதியிலே
"வா' என குழுவாய் சில மனிதர்

அழைத்தார் செல்லனை அன்பாக!
அருகில் வந்தான் செல்லனுமே!...
எழுத்தால் நிறைந்த கடிதத்தை
எடுத்துக் கொடுத்தார் செல்லனிடம்!

படித்துக் காட்டிட வேண்டுமென்று
பாங்காய் செல்லனைக் கேட்டார்கள்!
படித்துக் காட்டிடத் தெரியாமல்
பட்டான் நாணம் செல்லனுமே!

மனத்தால் "ஓ'  என அழுதிட்டான்!
மாண்புடன் தந்தை சொன்னதையே
நினைத்துப் பார்த்தான் நெஞ்சினிலே
நேரே வீட்டுக்குச் சென்றிட்டான்!

""அப்பா நீங்கள் சொன்னதெல்லாம் 
அலட்சியமாக நினைத்ததினால்
தவித்துப் போனேன் பலபேர் முன்
தகுதி இழந்தேன் படிப்பின்றி....

இனியும் தாமதம் செய்யாமல்
இன்றே பள்ளிக்குச் சென்றிடுவேன்!
முனைந்து கற்றுத் தேர்ந்திடுவேன்!
மூடத்தனங்களைப் போக்கிடுவேன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.