2021 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கார்ட், ஜோஸ்வா டி ஆங்க்ரிஸ்ட் மற்றும் கெய்டோ டபிள்யூ. இம்பென்ஸ் ஆகிய மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக ஸ்வீடனின் ஸ்டோக்ஹோமிலும் தேர்வுக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் பொருளாதாரம் குறித்த பங்களிப்பிற்காக டேவிட் கார்டுக்கு நோபல் பரிசின் ஒரு பாதியும், மற்ற இருவருக்கு மற்றொரு பாதியும் வழங்கப்படுகிறது.
முன்னதாக, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.
2021 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அக்.5, திங்கள்கிழமை முதல் தொடங்கி அறிவிக்கப்பட்டு வருகின்றன. மற்ற துறைகளுக்கு நோபல் பரிசுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் இறுதியாக இன்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
புதுவையில் 9 தொகுதிகளுக்கு பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு!

ஞாபகம் வருதே... புது தொகுதியின் முதல் எம்எல்ஏ!

தோ்தல் சுவாரஸ்யம்... இது சீா்காழி தொகுதி ‘சென்டிமென்ட்’
தொகுதி அறிமுகம்: நாகப்பட்டினம்
வீடியோக்கள்

உண்மையில் 4 முனைப்போட்டிதானா ? | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK | Dmk Alliance | NDA
தினமணி வீடியோ செய்தி...

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

