திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

டெஸ்லா சிஇஓ பதவியிலிருந்து விலகுகிறாரா எலான் மஸ்க்? அடுத்தக்கட்ட திட்டம் என்ன?

டெஸ்லாவின் 10 சதவிகித பங்குகளை விற்கலாமா வேண்டாமா என அந்நிறுவத்தின் தலைமை செயல் அலுவலர் எலான் மஸ்க், ட்விட்டரில் தன்னை பின்தொடர்பவர்களிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

News image

எலான் மஸ்க்

Updated On :10 டிசம்பர் 2021, 3:29 pm IST

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக உள்ள எலான் மஸ்க், தனது வேலையை விட்டு விலகுவது குறித்து யோசித்துவருவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முழுமையாக விவரிக்காமல் தனது ட்விட்டர் பக்கத்தில், "வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக செல்வாக்கு மிக்கவராக மாறுவது குறித்து யோசித்து கொண்டிருக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்" பதிவிட்டுள்ளார்.

பணியிலிருந்து விலகுவது குறித்து அவர் விளையாட்டுத்தனமாக கருத்து தெரிவித்தாரா அல்லது உண்மையாகவே தெரிவித்தாரா என்பது குறித்து தெளிவுப்படுத்தமுடியவில்லை. 

ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸின் நிறுவனரும் தலைமை செயல் அலுவலருமான எலான் மஸ்க், நியூராலிங்க் என்ற பிரெயின் சிப் ஸ்டார்ட் அப் நிறுவனத்தையும் தி போரிங் கன்பெனி என்ற கட்டுமான நிறுவனத்தையும் நடத்திவருகிறார்.  

இந்தாண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், "அடுத்த பல ஆண்டுகளுக்கு தலைமை செயல் அலுவலராக பணிபுரிவேன்" எனக் குறிப்பிட்டிருந்தார். அப்போது இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "நான் எழுந்தது முதல் வாரத்தில் 7 நாட்கள் தூங்கச் செல்லும் வரை, இரவும் பகலும் வேலை செய்வதை விட, எனக்கு கொஞ்சம் ஓய்வு நேரம் இருந்தால் நன்றாக இருக்கும்" என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.