டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக உள்ள எலான் மஸ்க், தனது வேலையை விட்டு விலகுவது குறித்து யோசித்துவருவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முழுமையாக விவரிக்காமல் தனது ட்விட்டர் பக்கத்தில், "வேலையை விட்டுவிட்டு முழு நேரமாக செல்வாக்கு மிக்கவராக மாறுவது குறித்து யோசித்து கொண்டிருக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்" பதிவிட்டுள்ளார்.
பணியிலிருந்து விலகுவது குறித்து அவர் விளையாட்டுத்தனமாக கருத்து தெரிவித்தாரா அல்லது உண்மையாகவே தெரிவித்தாரா என்பது குறித்து தெளிவுப்படுத்தமுடியவில்லை.
ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸின் நிறுவனரும் தலைமை செயல் அலுவலருமான எலான் மஸ்க், நியூராலிங்க் என்ற பிரெயின் சிப் ஸ்டார்ட் அப் நிறுவனத்தையும் தி போரிங் கன்பெனி என்ற கட்டுமான நிறுவனத்தையும் நடத்திவருகிறார்.
இதையும் படிக்க | அடுத்த முப்படைத் தலைமைத் தளபதி யார்?
இந்தாண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், "அடுத்த பல ஆண்டுகளுக்கு தலைமை செயல் அலுவலராக பணிபுரிவேன்" எனக் குறிப்பிட்டிருந்தார். அப்போது இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "நான் எழுந்தது முதல் வாரத்தில் 7 நாட்கள் தூங்கச் செல்லும் வரை, இரவும் பகலும் வேலை செய்வதை விட, எனக்கு கொஞ்சம் ஓய்வு நேரம் இருந்தால் நன்றாக இருக்கும்" என்றார்.