மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

பல்கேரியாவில் தீப்பிடித்து எரிந்த பயணிகள் பேருந்து: 45 பேர் பலி

பல்கேரியா நாட்டில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 45 பேர் பலியான சோகம் ஏற்பட்டுள்ளது.

News image

பல்கேரியாவில் தீப்பிடித்து எரிந்த பயணிகள் பேருந்து: 45 பேர் பலி

Updated On :23 நவம்பர் 2021, 3:57 pm IST

பல்கேரியா நாட்டில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 45 பேர் பலியான சோகம் ஏற்பட்டுள்ளது.

பல்கேரியாவில் பயணிகள் பேருந்தானது துருக்கியில் இருந்து வடக்கு மாசிடோனியா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அதிகாலை 2 மணியளவில் பேருந்தில் திடீரென தீப்பிடித்ததாகத் தெரிகிறது.

சூழலை உணர்வதற்குள் பேருந்து முழுவதுமாக எரிந்த நிலையில் பயணிகள் 45 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 7 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீப்பிடித்ததன் காரணமாக பேருந்து தடுப்புகளில் மோதியதா அல்லது தடுப்புகளில் மோதியதால் தீ பிடித்ததா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.