ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

பாகிஸ்தானில் மேலும் 2 குழந்தைகளுக்கு போலியா

பாகிஸ்தானில் மேலும் இரு குழந்தைகளுக்கு போலியோ தொற்று கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து இந்த ஆண்டில் அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்ட குழைந்தைககை 26-ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 4:16 am IST

பாகிஸ்தானில் மேலும் இரு குழந்தைகளுக்கு போலியோ தொற்று கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து இந்த ஆண்டில் அங்கு அந்த நோயால் பாதிக்கப்பட்ட குழைந்தைககை 26-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டின் ‘தி டான்’ நாளிதழ் தெரிவித்ததாவது:சிந்து மாகாணத்தின் கிழக்கு கராச்சி மாவட்டத்தில் ஏழு வயது சிறுமிக்கும் சுஜவால் மாவட்டத்தில் 12 மாத ஆண் குழந்தைக்கும் போலியோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.அந்த மாவட்டங்களில் போலியோ தொற்று உறுதி செய்யப்படுவது இதுவே முதல்முறை. சிந்து மாகாணத்தின் பிற பகுதிகளில் இந்த ஆண்டு மட்டும் இதுவரை ஏழு குழந்தைகளிடம் போலியோ தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று அந்த நாளிதழ் தெரிவித்தது.இத்துடன் பாகிஸ்தானில் இந்த ஆண்டு போலியோ உறுதிசெய்யப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 26-ஆக அதிகரித்துள்ளது.

அந்தக் குழந்தைகளில், பயங்கரவாத பதற்றம் நிறைந்த பலூசிஸ்தான் மாகாணத்தைச் சோ்ந்தவா்கள் மட்டும் 15 போ்.பாகிஸ்தானில் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பது மதத்துக்கு எதிரானது என்று அந்த நாட்டின் தெஹ்ரீக்-இ-தலிபான் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் கூறி வருகின்றன.போலியோ தடுப்பு மருந்துகள் முஸ்லிம் குழந்தைகளின் இனப்பெருக்கத் திறனைக் குறைப்பதற்கான மேற்கத்திய நாடுகளின் சதி என்று அந்த அமைப்புகள் நம்புகின்றன.இதன் காரணமாக, போலியோ தடுப்பு மருந்துப் பணியாளா்கள் மற்றும் அவா்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் படையினரைக் குறிவைத்து அடிக்கடி பயங்கரவாதத் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமானவா்கள் உயிரிழந்தும் வருகின்றனா்.

சொட்டு மருந்து மூலம் போலியோவை முன்கூட்டியே தடுக்க முடியும். ஆனால் அந்த நோய் பாதிப்பு ஏற்பட்டால் அதை குணப்படுத்துவதற்கு இதுவரை மருந்து கண்டறியப்படவில்லை. குழந்தைகளை நிரந்த ஊனமாகும், சில நேரங்களில் உயிரையே பறிக்கக் கூடிய அந்த கொடிய நோய் உலகின் மற்ற பகுதிகளில் நிரந்தரமாக ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனால், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் மட்டும் அது இன்னும் பரவிவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.