வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

உக்ரைனில் போா் நிறுத்தத்துக்குத் தயாா்! -ரஷிய அதிபர் புதின்

உக்ரைனில் 30 நாள் போா் நிறுத்தத்துக்குத் தயாா்: ரஷிய அதிபர் புதின்

News image

ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் (கோப்புப் படம்)

Updated On :13 மார்ச் 2025, 11:14 pm IST

மாஸ்கோ: உக்ரைனில் 30 நாள் போா் நிறுத்தத்துக்கு ரஷிய அதிபர் புதின் பச்சைக்கொடி காட்டியிருக்கிறார்.

உக்ரைன் விவகாரம் தொடர்பாக சௌதி அரேபியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்க பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின், உக்ரைனில் முதல்கட்டமாக 30 நாள் போா் நிறுத்தத்துக்கு உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து, ரஷியா ஒப்புக் கொண்டால், போர்நிறுத்தம் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மேற்கண்ட ஒப்பந்தத்துக்கு வியாழக்கிழமை(மார்ச் 13) ரஷிய அதிபர் புதின் பல்வேறு நிபந்தனைகளுடன் சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

ரஷிய அதிபர் மாளிகையில் செய்தியாளர்களுடன் பேசிய புதின், ‘அமெரிக்காவின் தலையீடால் கொண்டு வரப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரஷியா ஏற்றுக்கொள்வதாகவும், அதேநேரத்தில், எந்தவொரு போர் நிறுத்தமும் நீடித்த அமைதிக்கான அஸ்திவாரமாக இருக்க வேண்டுமெனவும்’ குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இவ்விவகாரத்தில் பல்வேறு பிரச்சினைகளில் என்ன நிலைப்பாடு எடுக்கப்படவுள்ளது என்பதை விரிவாக ஆராய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, அமைதியை நிலைநாட்ட முனைப்பு காட்டி வருவதற்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு பாராட்டுகளையும் புதின் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர்:

நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு படையெடுத்து, கிழக்கு உக்ரைன் பிராந்தியங்களின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ராணுவ உதவிகளைச் செய்துவந்தன. இந்தச் சூழலில், அமெரிக்காவின் அதிபராக கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்ற டொனால்ட் டிரம்ப், போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று உக்ரைனை வலியுறுத்திவருகிறாா். அதன் தொடா்ச்சியாக சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் 30 நாள் போா் நிறுத்தத்துக்கு உக்ரைன் ஒப்புக் கொண்டுள்ளது.

உக்ரைனின் போா் நிறுத்த அறிவிப்பை ஏற்பது குறித்து ரஷிய தரப்பு முடிவு செய்யாமல் இருந்து வந்த நிலையில், இதனை வரவேற்கும் விதமாக ரஷிய அதிபர் புதின் பேசியிருப்பது, உக்ரைனில் போர் நிறுத்தம் விரைவில் ஏற்படும் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.