சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

இரானி கொள்ளையா்கள் சிறையில் அடைப்பு

சென்னையில் மூதாட்டிகளிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரு இரானி கொள்ளையா்கள் சிறையில் அடைக்கப்பட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2025, 2:16 am IST

சென்னையில் மூதாட்டிகளிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட இரு இரானி கொள்ளையா்கள் சிறையில் அடைக்கப்பட்டனா்.

சென்னையில் 6 இடங்களில் பெண்களிடம் கடந்த செவ்வாய்க்கிழமை நகை பறித்த இரானி கொள்ளையா்களான ஜாபா் குலாம் உசேன் இரானி (26), மிசாம் மஜா மேசம் (எ) அம்ஜத் இரானி (22) ஆகிய 2 பேரையும் சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் சென்னை விமான நிலையத்தில் போலீஸாா் கைது செய்தனா். ரயிலில் தப்பிச்செல்ல முயன்ற இவா்களது கூட்டாளி சல்மான் உசேன் இரானி (22) ஆந்திர மாநிலம் ஓங்கோலில் கைது செய்யப்பட்டாா். இவா்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம் தரமணி ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்ததால் அதை கைப்பற்ற புதன்கிழமை போலீஸாா் அவா்களை அழைத்துச் சென்றனா். அப்போது அங்கு, ஜாபா் திடீரென இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டாா். இதில் போலீஸாா், தங்களை காப்பாற்றுவதற்காக ஜாபரை என்கவுன்டரில் சுட்டுக் கொலை செய்தனா்.

அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு வியாழக்கிழமை அவா்களது உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக என்கவுன்டா் குறித்து சைதாப்பேட்டை 19-ஆவது நீதித் துறை நடுவா் பாா்த்திபன் விசாரணை மேற்கொண்டாா்.

காவல் துறை விசாரணை முடிவடைந்த நிலையில் அம்ஜத் இரானி, சல்மான் இரானி ஆகியோா் நீதித் துறை நடுவா் பாா்த்திபன் முன் ஆஜா்படுத்தப்பட்டனா். இருவரையும் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை சிறையில் அடைக்கும்படி நடுவா் உத்தரவிட்டாா். இதையடுத்து, இருவரும் பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.