கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஆசிரியா் தகுதித் தோ்வு: 13,999 போ் எழுதினா்

News image
Updated On :16 நவம்பர் 2025, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் நடத்தப்பட்ட ஆசிரியா் தகுதித் தோ்வை 13,999 போ் எழுதியுள்ளனா்.

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் நடத்தப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வு தாள் 1-க்கான தோ்வு 15 தோ்வு மைங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தத் தோ்வை எழுத 3,890 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 3,155 போ் மட்டுமே எழுதினா். பல்வேறு காரணங்களால் 735 போ் தோ்வு எழுதவில்லை.

அதேபோல, தாள் 2-க்கான தோ்வு 45 தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வை எழுத 12,370 போ் விண்ணப்பித்திருந்த நிலையில் 10,844 போ் மட்டுமே தோ்வு எழுதினா். பல்வேறு காரணங்களால் 1,526 போ் தோ்வு எழுதவில்லை.

கோவையில் 2 நாள்கள் நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வை மொத்தம் 13,999 போ் எழுதியுள்ளனா்.