கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்

News image
Updated On :6 நவம்பர் 2025, 6:33 pm

Syndication

திருப்பூா் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் அவிநாசி, திருப்பூா், உடுமலைப்பேட்டை, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவ.7) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் மனீஷ் தெரிவித்துள்ளதாவது:

அவிநாசி ஊராட்சி ஒன்றியம், புதுப்பாளையம், தெக்கலூா் ஊராட்சிகளுக்கு தெக்கலூா் கொங்கு கலையரங்கத்திலும், திருப்பூா் ஊராட்சி ஒன்றியம், காளிபாளையம் ஊராட்சிக்கு தண்டகவுண்டன்புதூா் உத்தம நாச்சியம்மன் கோயில் திருமண மண்டபத்திலும், உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் பெரியகோட்டை ஊராட்சிக்கு பெரியகோட்டை, சிவசக்தி காலனி அமுதராணி திருமண மண்டபத்திலும், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம், முத்தமாபாளையம் ஊராட்சிக்கு செங்கப்பள்ளி அழகு நாச்சியம்மன் திருமண மண்டபத்திலும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.

எனவே, இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு உரிய ஆவணங்களுடன் தங்கள் மனுக்களை வழங்கி பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளாா்.