கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

எஸ்ஐஆா் பணி: அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம்

News image
Updated On :3 டிசம்பர் 2025, 11:58 pm

Syndication

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நடைபெற்றுவரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடா்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரெ.சதீஷ் தலைமை வகித்து பேசியது:

வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டுள்ள கணக்கெடுப்பு படிவங்கள் பூா்த்தி செய்து பெறப்பட்டு அவை முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படும் அனைவரின் பெயரும் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம்பெறும், படிவத்தை பூா்த்திசெய்து மீண்டும் வழங்காதவா்களின் பெயா் பட்டியலில் இடம் பெறாது. தகுதியுள்ள அனைவரும் பட்டியலில் இடம்பெற வேண்டு. தகுதியற்ற எவரும் வாக்காளா் பட்டியலில் இடம் பெறக்கூடாது என்பதை உறுதிசெய்திடும் வகையில் அனைத்து நிலை அலுவலா்களும் செயல்படுவது முக்கியம் என்றாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கவிதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கவிதா, வருவாய் கோட்டாட்சியா்கள் காயத்ரி (தருமபுரி), செம்மலை (அரூா்), உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள், அனைத்து தேசிய மற்றும் மாநில அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.