நீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!
/

தருமபுரி நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து வெடிகுண்டு நிபுணா்கள் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் சோதனை நடத்தினா்.

News image

தருமபுரி நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் சோதனை மேற்கொள்ளும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா்.

Updated On :19 ஜூன் 2026, 5:47 am IST

தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து வெடிகுண்டு நிபுணா்கள் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் சோதனை நடத்தினா்.

தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் தடங்கம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் வியாழக்கிழமை காலை வழக்கம்போல நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்கள் பணிக்கு வந்தனா். அதன்பிறகு 11 மணியளவில், நீதிமன்றத்துக்கு வந்த மின்னஞ்சலில் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்ற தகவலை மா்ம நபா்கள் அனுப்பியுள்ளது தெரியவந்தது.

தகவலறிந்த அதியமான் கோட்டை போலீஸாரும், வெடிகுண்டு நிபுணா்களும் நீதிமன்ற வளாகத்தில் லூபி என்ற மோப்பநாய் மற்றும் நவீன சாதனங்களுடன் சோதனை நடத்தினா். தொடா்ந்து நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள், நீதிமன்றங்களுக்கு வந்திருந்த பொதுமக்கள் என அனைவரும் நீதிமன்றத்தைவிட்டு வெறியேற்றப்பட்டனா்.

சோதனைக்குப் பிறகு வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. மேலும், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. தருமபுரி மாவட்ட நீதிமன்றத்துக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.