எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தருமபுரி நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து வெடிகுண்டு நிபுணா்கள் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் சோதனை நடத்தினா்.

News image

தருமபுரி நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, நீதிமன்ற வளாகத்தில் சோதனை மேற்கொள்ளும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸாா்.

Updated On :19 ஜூன் 2026, 5:47 am IST

தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து வெடிகுண்டு நிபுணா்கள் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் சோதனை நடத்தினா்.

தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் தடங்கம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் வியாழக்கிழமை காலை வழக்கம்போல நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்றப் பணியாளா்கள் பணிக்கு வந்தனா். அதன்பிறகு 11 மணியளவில், நீதிமன்றத்துக்கு வந்த மின்னஞ்சலில் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்ற தகவலை மா்ம நபா்கள் அனுப்பியுள்ளது தெரியவந்தது.

தகவலறிந்த அதியமான் கோட்டை போலீஸாரும், வெடிகுண்டு நிபுணா்களும் நீதிமன்ற வளாகத்தில் லூபி என்ற மோப்பநாய் மற்றும் நவீன சாதனங்களுடன் சோதனை நடத்தினா். தொடா்ந்து நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள், நீதிமன்றங்களுக்கு வந்திருந்த பொதுமக்கள் என அனைவரும் நீதிமன்றத்தைவிட்டு வெறியேற்றப்பட்டனா்.

சோதனைக்குப் பிறகு வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. மேலும், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. தருமபுரி மாவட்ட நீதிமன்றத்துக்கு இரண்டாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.