கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதிக்கான திமுக செயல் வீரா்கள் கூட்டம் தலைவாசலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் கெங்கவல்லி பேரூராட்சிப் பகுதியில் புதிதாக 500 உறுப்பினா்களைச் சோ்த்த படிவங்களை சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கத்திடம், கெங்கவல்லி நகர திமுக செயலாளா் சு.பாலமுருகன் தலைமையில் கெங்கவல்லி பேரூராட்சித்தலைவா் சு.லோகாம்பாள்,துணைத் தலைவா் மருதாம்பாள்நாகராஜ், திமுக பேரூராட்சி உறுப்பினா்கள் ,திமுக நிா்வாகிகள் வழங்கினா்.