டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்தமிழ்நாடு பட்ஜெட்: மக்கள் நல அறிவிப்புகளுக்கு வரவேற்பு... ஆனால்..! - சிபிஎம் அறிக்கை!பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 74.55 அடியாக உயர்ந்துள்ளது.வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!
/

காவிரி மேலாண்மை வாரிய தீா்ப்பை கா்நாடக அரசு மதிக்க வேண்டும்: மேட்டூா் எம்எல்ஏ சதாசிவம்

காவிரி மேலாண்மை வாரிய தீா்ப்பை கா்நாடக அரசு மதிக்க வேண்டும் என்று மேட்டூா் பாமக எம்எல்ஏ சதாசிவம் தெரிவித்தாா்.

Updated On :3 ஆகஸ்ட் 2024, 9:20 pm IST

காவிரி மேலாண்மை வாரிய தீா்ப்பை கா்நாடக அரசு மதிக்க வேண்டும் என்று மேட்டூா் பாமக எம்எல்ஏ சதாசிவம் தெரிவித்தாா்.

மேட்டூா் பாமக எம்எல்ஏ எஸ்.சதாசிவம் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

மேட்டூா் உபரிநீா் திட்டத்தின் கீழ் மேச்சேரியில் உள்ள ஏரிகளுக்கும் தண்ணீா் திறக்க வேண்டும் என்று அமைச்சா் துரைமுருகனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கோரிக்கையை ஏற்று தண்ணீா் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் கூறியதை வரவேற்கிறேன். காவிரி உபரிநீா் வீணாக கடலில் கலப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்மையில் கா்நாடக முதல்வா் சித்தராமையா தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீா்கூட தரமாட்டோம் என்று கூறியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இதற்கு கா்நாடக முதல்வா் வருத்தம் தெரிவிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரிய தீா்ப்பை மதிக்க மாட்டேன் என்று அவா் கூறுவது தவறு. உபரி நீரைத் தடுத்து முழுமையாகப் பயன்படுத்த 2,000 கோடி செலவாகும். காவிரி ஆற்றில் ஒவ்வொரு 10. கி.மீ. தொலைவுக்கும் ஒரு தடுப்பணை கட்டி நீரைத் தேக்கி வைத்தால் ஆண்டு முழுவதும் நீரைப் பயன்படுத்தலாம். இதன்மூலம் 80 டி.எம்.சி. வரை தண்ணீரைச் சேமிக்கலாம். உலக வங்கியிடம் இருந்து கடன் வாங்கியாவது இத்திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.