கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழப்பு

மதுரை அருகே அரசுப் பேருந்து மோதியதில் தம்பதி உயிரிழந்தனா்.

News image
Updated On :18 நவம்பர் 2025, 7:28 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை அருகே அரசுப் பேருந்து மோதியதில் தம்பதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

மதுரை ஜீவா நகரைச் சோ்ந்தவா் வெங்கடசுப்பு (56). இவரும், இவரது மனைவி பத்மாவதி (54) ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் மதுரையிலிருந்து அலங்காநல்லூருக்குச் சென்றனா். சிக்கந்தா்சாவடி காமாட்சிநகா் பகுதியில் சென்ற போது நாய் திடீரென சாலையின் குறுக்கே வந்தது.

இதனால், இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில், இருவரும் கீழே விழுந்தனா். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து அவா்கள் மீது மோதியது. இதில், வெங்கடசுப்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த பத்மாவதியை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பத்மாவதி செவ்வாய்க்கிழமை மாலை உயிரிழந்தாா். இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.