தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

லோயர் கேம்ப்  4 சிறுபுனல் மின்திட்டம்: விநாடிக்கு 10 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி

கம்பம்: தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அருகே உள்ள 4 சிறுபுனல் மின்திட்டங்களில் மின்சார உற்பத்தி தொடர்ந்து உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்தம் விநாடிக்கு 10 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது.

News image

குள்ளப்பகவுண்டன்பட்டியில் உள்ள சிறு புனல் மின்திட்டம்.

Updated On :8 ஆகஸ்ட் 2022, 12:07 pm IST

கம்பம்: தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அருகே உள்ள 4 சிறுபுனல் மின்திட்டங்களில் மின்சார உற்பத்தி தொடர்ந்து உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்தம் விநாடிக்கு 10 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது.

தேனி மாவட்டம் லோயர் கேம்ப் அருகே வைரவன் ஆறு, வெட்டுக்காடு, கப்பாமடை, குள்ளப்ப கவுண்டன் பட்டி ஆகிய நான்கு இடங்களில் கடந்த 2006 ஆம் ஆண்டு முல்லைப்பெரியாறு தாழ்வாக செல்லும் இடங்களில் சிறு புனல் மின்திட்டம் தொடங்கப்பட்டது.

இந்த மின்சார உற்பத்தி நிலையத்தில் இரண்டு மின்னாக்கிகள் மூலம் தலா 1.25 மெகாவாட் என மொத்தம் நான்கு மின் திட்டங்களில் விநாடிக்கு 10 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் தொடங்கிய மின்சார உற்பத்தி தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

மின் உற்பத்தி பாதிப்பு 

இதே போல் சுருளியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் பழுதான பென்ஸ்டாக் குழாய் வெடிப்பால் கடந்த 10 மாதங்களாக மின் உற்பத்தி தடைப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. இந்த குழாய் உடைப்பை சரி செய்து விரைவில் மின் உற்பத்தியை தொடங்குமாறு  மின்சார வாரியத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.