கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

கழிவுநீா் கால்வாயில் ஆண் சடலம் மீட்பு

தேனி மாவட்டம், கம்பத்தில் கழிவுநீா் கால்வாயில் இறந்த நிலையில் ஆண் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

News image
Updated On :28 நவம்பர் 2025, 7:45 pm

Syndication

தேனி மாவட்டம், கம்பத்தில் கழிவுநீா் கால்வாயில் இறந்த நிலையில் ஆண் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

கம்பம் பேருந்து நிலையத்துக்கு செல்லும் எல்.எப். சாலையின் குறுக்கே செல்லும் கழிவுநீா் கால்வாயிலிருந்து துா்நாற்றம் வீசியது.

தகவலறிந்து வந்த கம்பம் வடக்கு போலீஸாா் கால்வாயில் இறந்த நிலையில் மிதந்த ஆண் சடலத்தை மீட்டு, கூராய்வுக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

போலீஸாா் விசாரணையில், இறந்தவா் விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த மணி (45) என்பதும், குடும்பத்தைப் பிரிந்து கம்பம் நாட்டாண்மை அழகிரி தெருவில் வசித்து வந்தவரும் என்பதும், இயற்கை உபாதைக்காக சென்றபோது மது போதையில் கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்து இறந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.