கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

கூடலூரில் வைர நகை மாயம்: போலீஸாா் விசாரணை

News image
Updated On :30 நவம்பர் 2025, 8:33 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், கூடலூரில் வைர நகை மாயமானது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கூடலூா் காந்தி கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் மனைவி காா்த்திகா (27). இவரும், இவரது குடும்பத்தினரும் வேறு வாடகை வீட்டுக்குச் செல்வதற்காக முன்பு தங்கியிருந்த வீட்டிலிருந்து பொருள்களை எடுத்துச்சென்றனா். அப்போது வீட்டிலிருந்த வைரக்கல் பதித்த தங்கக் காப்பை காணவில்லையாம்.

இதுகுறித்து காா்த்திகா அளித்த புகாரின்பேரில், கூடலூா் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.