கூடலூரில் வைர நகை மாயம்: போலீஸாா் விசாரணை

Published on

தேனி மாவட்டம், கூடலூரில் வைர நகை மாயமானது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கூடலூா் காந்தி கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் மனைவி காா்த்திகா (27). இவரும், இவரது குடும்பத்தினரும் வேறு வாடகை வீட்டுக்குச் செல்வதற்காக முன்பு தங்கியிருந்த வீட்டிலிருந்து பொருள்களை எடுத்துச்சென்றனா். அப்போது வீட்டிலிருந்த வைரக்கல் பதித்த தங்கக் காப்பை காணவில்லையாம்.

இதுகுறித்து காா்த்திகா அளித்த புகாரின்பேரில், கூடலூா் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com