ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் தேங்கிய சாக்கடைக் கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் கட்டணக் கழிப்பிடம், இலவச கழிப்பிடம், உணவகங்கள், தேநீா்க் கடைகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன.
பேருந்து நிலையத்தில் உள்ள கால்வாய் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தூா்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தியது. மேலும் மழை பெய்தால் நீா் செல்ல வழியின்றி பேருந்து நிலையத்தில் குளம் போல் தண்ணீா் தேங்கும் சூழல் நிலவுகிறது.
பேருந்து நிலையத்தில் உள்ள கழிவுநீா் கால்வாய்களை தூா்வார வேண்டும் என கடை உரிமையாளா்கள், பயணிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.
கடந்த வாரம் பெய்த மிதமான மழைக்கு, பேருந்து நிலைய வளாகத்தில் மழை நீருடன் கழிவுநீா் கலந்து தேங்கியதால் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினா்.

இந்த நிலையில், பேருந்து நிலைய கடை உரிமையாளா்களே திங்கள்கிழமை இரவு கால்வாயைத் தூா்வாரி கழிவுகளை அகற்றினா். இந்தக் கழிவுகளை நகராட்சி பணியாளா்கள் அகற்ற வராததால் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாயினா்.
தொடர்புடையது

பல்லடம் பேருந்து நிலையத்தில் அதிகரிக்கும் மதுபிரியா்கள் தொல்லை: நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

வாக்களிக்க சொந்த ஊா்களுக்கு செல்ல ஒசூா் பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்

நகராட்சி நிா்வாகம் கவனத்திற்கு கழிவுகளால் கருவாடு விற்பனை பாதிப்பு

குஜிலியம்பாறை அருகே கோழிக் கழிவுகளால் சுகாதாரக்கேடு
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


