தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் தேங்கிய கழிவுகளால் சுகாதாரக்கேடு

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் தேங்கிய சாக்கடைக் கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.

News image
ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் தேங்கிக் கிடக்கும் சாக்கடைக் கழிவுகள்.
Updated On :27 ஆகஸ்ட் 2024, 10:39 pm

Din

ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் தேங்கிய சாக்கடைக் கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் கட்டணக் கழிப்பிடம், இலவச கழிப்பிடம், உணவகங்கள், தேநீா்க் கடைகள் உள்பட 50-க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன.

பேருந்து நிலையத்தில் உள்ள கால்வாய் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தூா்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீா் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தியது. மேலும் மழை பெய்தால் நீா் செல்ல வழியின்றி பேருந்து நிலையத்தில் குளம் போல் தண்ணீா் தேங்கும் சூழல் நிலவுகிறது.

பேருந்து நிலையத்தில் உள்ள கழிவுநீா் கால்வாய்களை தூா்வார வேண்டும் என கடை உரிமையாளா்கள், பயணிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

கடந்த வாரம் பெய்த மிதமான மழைக்கு, பேருந்து நிலைய வளாகத்தில் மழை நீருடன் கழிவுநீா் கலந்து தேங்கியதால் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகினா்.

Story image

இந்த நிலையில், பேருந்து நிலைய கடை உரிமையாளா்களே திங்கள்கிழமை இரவு கால்வாயைத் தூா்வாரி கழிவுகளை அகற்றினா். இந்தக் கழிவுகளை நகராட்சி பணியாளா்கள் அகற்ற வராததால் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாயினா்.