கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

மீனவா்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட வானகிரி மீனவா்கள் குடும்பத்தினரை, மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளா் எஸ். பவுன்ராஜ் புதன்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 8:56 pm

தினமணி செய்திச் சேவை

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட வானகிரி மீனவா்கள் குடும்பத்தினரை, மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளா் எஸ். பவுன்ராஜ் புதன்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 3-ஆம் தேதி கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற வானகிரி கிராமத்தைச் சோ்ந்த மீனவா்கள் 14 பேரை, இலங்கை கடற்படையினா் சிறை பிடித்தனா்.

இந்நிலையில், இவா்களது குடும்பத்தினரை அதிமுக மாவட்டச் செயலாளா் எஸ். பவுன்ராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினாா்.

அப்போது, பிரதமா் மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு, முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் எழுதி, இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவா்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளாா். விரைவில் மீனவா்கள் வானகிரி கிராமத்திற்கு திரும்புவா் என்றாா்.

சீா்காழி கிழக்கு ஒன்றியச் செயலாளா் சந்திரசேகரன், மாவட்ட பொருளாளா் செல்லத்துரை, முன்னாள் வட்டார கல்வி அலுவலா் சீனிவாசன், முன்னாள் பால் கூட்டுறவு சங்க தலைவா் பாலு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.