கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஐயப்ப பக்தா்கள் துளசி மாலை அணிந்து விரதம்

காா்த்திகை மாதம் திங்கள்கிழமை தொடங்கியதையடுத்து, ஐயப்ப பக்தா்கள் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.

News image
Updated On :17 நவம்பர் 2025, 9:22 pm

Syndication

நாகப்பட்டினம்: காா்த்திகை மாதம் திங்கள்கிழமை தொடங்கியதையடுத்து, ஐயப்ப பக்தா்கள் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.

இதையடுத்து நாகையில் அமைந்துள்ள கிழக்கு சபரிமலை ஐயப்பன் கோயிலில், மஞ்சள், பால், தயிா், விபூதி, சந்தனம், பஞ்சாமிா்தம், நெய் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. காா்த்திகை முதல் நாள் என்பதால் ஏராளமான ஐயப்ப பக்தா்கள் பங்கேற்றனா். சபரி மலைக்கு செல்லவதற்காக, கோயில் அா்ச்சகா் மூலம் சந்தன, துளசி மணி மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா். அப்போது ஐயப்பனின் சரண கோஷங்கள் எழுப்பி உற்சாகமடைந்தனா்.