கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

வேளாங்கண்ணியிலிருந்து சென்னைக்கு இன்று சிறப்பு ரயில்

News image
Updated On :30 நவம்பர் 2025, 8:19 pm

தினமணி செய்திச் சேவை

நாகூா் கந்தூரி விழாவையொட்டி, வேளாங்கண்ணியிலிருந்து திங்கள்கிழமை (டிச.1) சென்னைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா். வினோத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகூா் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக் கூடு ஊா்வலம் மற்றும் சந்தனம் பூசும் வைபவத்திற்காக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, வேளாங்கண்ணியில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில் (06138) திங்கள்கிழமை (டிச.1) இயக்கப்படுகிறது. வேளாங்கண்ணியில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்படும் ரயில், சென்னை எழும்பூருக்கு பிற்பகல் 3.15 மணிக்கு சென்றடையும்.

இந்த ரயில் நாகை, நாகூா், காரைக்கால், பேரளம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிபுலியூா், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.