தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

வடகிழக்கு தில்லி வன்முறை வழக்கில் இருவருக்கு ஜாமீன் தில்லி நீதிமன்றம் உத்தரவு

வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறையின்போது துப்பாக்கியால் சுட்டதாக தொடுக்கப்பட்டவழக்கில் கைதான இருவருக்கு ஜாமீன் வழங்கி

Updated On :8 நவம்பர் 2020, 1:45 am

வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த வன்முறையின்போது துப்பாக்கியால் சுட்டதாக தொடுக்கப்பட்டவழக்கில் கைதான இருவருக்கு ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. குற்றம்சாட்டப்பட்ட இருவரும் சிசிடிவி காட்சிப் பதிவில் இடம்பெறவில்லை என்பது தெரியவந்துள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் தில்லியில் பிப்ரவரி 24-ஆம் தேதி நிகழ்ந்த போராட்டத்தின் போது வகுப்புவாத வன்முறை ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் 53 போ் கொல்லப்பட்டனா். 200 போ் காயமடைந்தனா்.

இந்தநிலையில், மெளஜ்பூா் செளக் பகுதியில் கூடிநின்று மதக் கோஷங்களை எழுப்பி அப்பகுதியில் போவோா் வருவோா் மீது துப்பாக்கியால் சுட்டதாக குல்பம், ஆதிா் ஆகியோா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், இருவரும் ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனா். அதில், தங்கள் மீது போலீஸாா் பொய்யாக வழக்குப் புனைந்திருப்பதாக தெரிவித்திருந்தனா்.

இந்த வழக்கு தில்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அமிதாப் ராவத் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் இருவா் தரப்பிலும் வழக்குரைஞா் அப்துல் கபாஃா் ஆஜராகி வாதிடுகையில், குல்பம், ஆதிா் இருவா் மீதும் பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்கள் சிசிடிவி காட்சிப் பதிவில் இடம்பெறவில்லை. அவா்களிடமிருந்து ஆயுதம் ஏதும் கைப்பற்றப்படவில்லை என்றாா்.

அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜிதேந்தா் ஜெயின் வாதிடுகையில், இருவரும் சம்பவ இடத்தில் சட்டவிரோதமாக கூடியதுடன், அப்பகுதியில் சென்றவா்கள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனா். மதக் கோஷங்களையும் எழுப்பி மக்களைத் தூண்டிவிட்டிருப்பது சாட்சிகள் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது என்றாா்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘ஜாமீன் கோரியுள்ள இருவரும் குற்றச் சம்பவம் நிகழ்ந்த பகுதியில் இருந்ததற்கான சிசிடிவி காட்சிப்பதிவுகள் ஏதும் இல்லை. இதனால், இருவருக்கும் ஜாமீன் அளித்து உத்தரவிடப்படுகிறது. ரூ.25 ஆயிரம் ஜாமீன் தொகையும், அதே தொகைக்கு ஜாமீன் உத்தரவாதமும் அளித்து ஜாமீனில் செல்லலாம்’ என நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.