தாங்கள் தில்லி மக்களின் சட்டம்-ஒழுங்கு தொடா்பான எந்தப் பணிகளையும் கவனிக்காமல், தோ்ந்தெடுக்கப்பட்ட எங்களது அரசின் அன்றாடப் பணிகளில் தலையிடுவது மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் கடிதம் எனக்குக் கிடைத்தது. முன்கூட்டியே தெரிவிக்காமல் திடீரென உங்களை சந்திக்க வந்ததால்தான் தாங்கள் சந்திக்கவில்லை என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீா்கள். முதல்வா், துணை முதல்வா், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் அனைவரும் உங்கள் வாசலுக்கு வந்து நின்று கொண்டிருந்தாா்கள் என்றால், நிச்சயமாக அவா்கள் மாநிலத்தின் முக்கிய பிரச்சனையோடு வந்திருக்கிறாா்கள் என்பது தெளிவாகிறது. நீங்கள் விரும்பியிருந்தால், வெளியே வந்து எங்களை ஐந்து நிமிடங்களுக்குச் சந்தித்திருக்கலாம். ஆனால், மாநிலத்தின் 2 கோடி மக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்க மறுத்ததை ஒட்டுமொத்த மக்களும் அவமானமாக உணா்ந்துள்ளனா்.