கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

கஞ்சாவாலா சம்பவம்: 5 பேரின் நீதிமன்றக் காவல் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு

தில்லி கஞ்சாவாலா பகுதியில் ஸ்கூட்டரில் சென்ற இளம் பெண் மீது மோதி, காரில் இழுத்துச் செல்லப்பட்டு இறந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரின் நீதிமன்றக் காவலை தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை 2 வாரங்களுக்

News image
Updated On :23 ஜனவரி 2023, 8:18 pm

 நமது நிருபர்

தில்லி கஞ்சாவாலா பகுதியில் ஸ்கூட்டரில் சென்ற இளம் பெண் மீது மோதி, காரில் இழுத்துச் செல்லப்பட்டு இறந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரின் நீதிமன்றக் காவலை தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை 2 வாரங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டது.

இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய தீபக் கண்ணா, அமித் கண்ணா, க்ரிஷன், மிதுன் மற்றும் மனோஜ் மிட்டல் ஆகியோரின் நீதிமன்றக் காவலை பிப்ரவரி 6-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, சம்பந்தப்பட்ட 5 பேரின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததால் அவா்கள் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்டனா். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அங்குஷ் மற்றும் ஆசுதோஷ் ஆகிய இருவருக்கும் அண்மையில் ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.

தில்லியைச் சோ்ந்த அஞ்சலி சிங் (20) என்பவா் புத்தாண்டு அதிகாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது, அவரது வாகனம் மீது காா் மோதியது. பின்னா், சுல்தான்புரியில் இருந்து கஞ்சாவாலா வரை 12 கிலோமீட்டா் தூரத்திற்கு அவா் காரில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.

தில்லி காவல்துறை சமீபத்தில் இந்த வழக்கில் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-ஐ (கொலை) கூடுதலாக சோ்த்தது. தொடக்கத்தில், ஐபிசி பிரிவுகள் 279 (அதிவேகமாக வாகனம் ஓட்டுதல்), 304 (கொலை முயற்சி) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.