இந்த மனுவை உயா்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சட்டம் 1959-இன் பிரிவு 47 (1) (சி) பிரிவின் கீழ் ஒவ்வொரு கோயிலிலும் அறங்காவலா் குழு நியமிக்கப்படவும், அதில் அட்டவணை பட்டியலை சோ்ந்த ஒருவரும், பெண் ஒருவரும் உறுப்பினா்களாக இடம் பெறவும், மூன்று உறுப்பினா்களுக்கு குறையாமலும் ஐந்து உறுப்பினா்களுக்கு மிகாமலும் அறங்காவலா் குழு இருக்கவும் ஏற்கெனவே விதிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி அறங்காவலா் குழுவை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப் பெற்று, நியமிக்கும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இதை ஏற்று பொதுநல மனுவை தள்ளுபடி செய்து 9.12.2021-இல் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.