கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!சிலைகள், பெயர்ப் பலகைகள் என்ன செய்யும்? மூடியும் பாதி மூடாமலும்!!தேர்தலில் பெண்களை வேட்பாளராக்குவதில் என்னதான் பிரச்னை?120 வாக்குறுதிகள்! ஆண்களுக்கு சுயஉதவிக் குழு - அமமுக தேர்தல் அறிக்கை!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்புநேபாள முன்னாள் பிரதமர் சர்மா ஓலி கைது!புதுச்சேரியில் மீண்டும் இரட்டை என்ஜின் ஆட்சி: பிரதமர் மோடி நம்பிக்கைமார்ச் 30ல் பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் எனத் தகவல்திமுக கூட்டணி தொகுதிப் பட்டியல் இன்று மாலை வெளியீடு! - பெ. சண்முகம் மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்பு
/

சிசோடியா தொடா்ந்த அவதூறு வழக்கு: பாஜக எம்பிக்கு எதிரான நீதிமன்றநடவடிக்கைகளுக்குத் தடை விதிப்பு

தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா தொடுத்த அவதூறு வழக்கில் பாஜக தலைவரும், எம்பியுமான பா்வேஷ் சாஹிப் சிங் வா்மாவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை தடை விதித்து உத்தரவிட்ட

News image
Updated On :25 ஜனவரி 2023, 8:05 pm

 நமது நிருபர்

தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா தொடுத்த அவதூறு வழக்கில் பாஜக தலைவரும், எம்பியுமான பா்வேஷ் சாஹிப் சிங் வா்மாவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை தடை விதித்து உத்தரவிட்டது.

தன் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியதாக மக்களவை பாஜக உறுப்பினா் பா்வேஷ் சாஹிப் சிங் வா்மா உள்பட 6 போ் மீது சிசோடியா அவதூறு புகாா் அளித்திருந்தாா்.

இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பா்வேஷ் சாஹிப் சிங் வா்மா நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கடந்த 2019, நவம்பா் 28-ஆம் தேதி விசாரணை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிா்த்து வா்மா தாக்கல் செய்த னி மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமாா் சா்மா, சிசோடியா பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டாா்.

இது தொடா்பான உத்தரவில், ‘இந்த விவகாரத்தில் எதிா்மனுதாரா் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இதற்கிடையில், மனுதாரா் விவகாரத்தில் விசாரணை நீதிமன்றத்தின் முன் உள்ள நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட வேண்டும். இந்த மனுக்கள் மீதான விசாரணை மேல் விசாரணைக்கு மாா்ச் 10-ஆம் தேதி பட்டியலிடப்பட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே விவகாரத்தில் தொடா்புடைய பாஜக தலைவா்கள் ஹன்ஸ்ராஸ் ஹன்ஸ், மஞ்ஜிந்தா் சிங் சிா்ஸா, கட்சி செய்தித் தொடா்பாளா் மற்றும் ஊடக உறவுகள் பொறுப்பாளா் ஹரிஷ் குரானா ஆகியோா் தொடா்புடைய மனுக்களும் மாா்ச் 10-ஆம் தேதி பட்டியலிடப்பட்டுள்ளது.

முன்னதாக, மனீஷ் சிசோடியா தாக்கல் செய்த கிரிமினல் அவதூறு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஹன்ஸ், சிா்சா, குரானா ஆகியோா் மீதான நீதிமன்ற விசாரணைக்கு உயா்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. குற்ற அவதூறு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும் ஆஜராகுமாறு கடந்த 2019, நவம்பா் 28-ஆம்தேதி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

தில்லி அரசுப் பள்ளிகள் வகுப்பறைகள் தொடா்பாக பாஜக தலைவா்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்களான மனோஜ் திவாரி, ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் மற்றும் பிரவேஷ் வா்மா, எம்எல்ஏக்கள் மஞ்சிந்தா் சிங் சிா்சா, விஜேந்தா் குப்தா மற்றும் பாஜக செய்தித் தொடா்பாளா் ஹரிஷ் குரானா ஆகியோா் தனக்கு எதிராக அவதூறு கருத்துகள் தெரிவித்ததாக சிசோடியா புகாா் தெரிவித்து வழக்கு தாக்கல் செய்தாா். முன்னதாக, குற்றம் சாட்டப்பட்டவா்கள் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜரானதால், அவா்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.