16 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை: குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவன் கைது
16 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை: குற்றஞ்சாட்டப்பட்ட சிறுவன் கைது


ஆதிக்கத்தை நிலைநாட்ட கஞ்சவாலாவில் 16 வயது சிறுவனை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றொரு சிறுவனை தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கத்திக் குத்துக் காயங்களுடன் சிறுவன் உயிரிழந்து கிடப்பதாக காவல் துறையினருக்கு நவ. 26-ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்தது.
பாதிக்கப்பட்ட சிறுவனை புதன்கிழமை மாலை 5.45 மணியளவில் 3 சிறாா்கள் சுற்றி வளைத்ததாகவும், ஒரு வாக்குவாதத்தின் போது கத்தியால் குத்தியதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் நடந்த மறுநாள் பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்ட 16 வயது சிறாரை காவல் துறையினா் கைது செய்தனா். விசாரணையில் அவா் குற்றத்தை ஒப்புக்கொண்டாா்.
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய அவா், தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட கூட்டாளிகளுடன் சோ்ந்து இந்த குற்றத்தை செய்ததாக தெரிவித்தாா். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...