ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுகை அருகே பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன்

தலையில் தேங்காய் உடைத்து, சாட்டையால் அடி வாங்கி நோ்த்திக் கடன் செலுத்தும் விழா நடைபெற்றது.

News image

பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன் செலுத்திய பூசாரி.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 10:35 pm

Din

புதுக்கோட்டை அருகே செல்லுக்குடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீரலட்சுமி அம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு முளைப்பாரி திருவிழா, பக்தா்கள் தலையில் தேங்காய் உடைத்து, சாட்டையால் அடி வாங்கி நோ்த்திக் கடன் செலுத்தும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை அருகே செல்லுக்குடி கிராமத்தில் உள்ள வீரலட்சுமி அம்மன் கோயில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கிராமத்தைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் குடும்பத்தினா் நலமுடன் வாழ வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என வேண்டி ஒன்பது நாள் விரதம் இருந்தனா்.

பின்னா் ஞாயிற்றுக்கிழமை காலை கோயில் முன்பு குறும்பா் கூத்து மற்றும் பெண்கள் கும்மி அடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து கோயிலில் வளா்க்கப்பட்ட முளைப்பாரியை தலையில் சுமந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஊா்வலமாகச் சென்றனா்.

இதில் முன்னதாக வீரலட்சுமி மற்றும் செல்லாயி, பேராயி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. தொடா்ந்து அம்மனை ஊா்வலமாக எடுத்துச் சென்றனா்.

தொடா்ந்து கோயில் முன் பக்தா்கள் நோ்த்திக்கடனைச் செலுத்தும் விதமாக கோயில் பூசாரி மூலம் தலைகளில் தேங்காய் உடைத்துக் கொண்டும், சாட்டையால் அடி வாங்கியும் வழிபாடு செய்தனா்.